நாலாயிர திவ்விய பிரபந்தம் யுனிகோடில்

Tuesday, October 26, 2004

அனைவருக்கும் வணக்கம்.

அனைவருக்கும் வணக்கம்.
இந்த வலைப்பதிவைத் தொடங்கி வைத்துவிட்டேன், எவ்வாறு அவற்றை நிறைவேற்றப்போகிறேனோ தெரியவில்லை. எல்லாம் அந்த அரங்கனின் செயல் என்றே நினைக்கிறேன். நமது தொன்மையான தமிழிலக்கியத்திலே காப்பியங்களுக்கு அடுத்தப்படியாக இருப்பது இந்த சமய இலக்கியங்களே, சமய இலக்கியம் என்றால் மதத்தைச் சார்ந்து, அந்த மதத்தின் கடவுளை நினைத்து எழுதியவைகள். நம்மிடம் இரண்டு பெரிய சமய இலக்கியங்கள் உள்ளன. ஒன்று சைவ மதத்தைச்சார்ந்தது. அதாவது சைவத்திருமறைகள். இரண்டாவது வைணவ இலக்கியம், அதாவது நாலாயிர திவ்விய பிரபந்தம்.இந்த நாலாயிர திவ்விய பிரபந்தத்தைப் பற்றித்தான், அந்த நாலாயிர திவ்விய பிரபந்த பாடல்களைத்தான் இந்தப்பக்கங்களில் காணப்போகிறீர்கள் அதுவும் யூனிகோடில். ஏகப்பட்ட தளங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. ஆனால் தமிழில் இல்லை.இருந்தாலும் அதற்கான எழுத்துரு தேவை. ஆகவேதான் இந்த பக்கம்..... முயற்சி செய்கிறேன் எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்.
தொடர்ந்து நாம் பக்கங்களுக்குச் செல்வோம்.....
அந்த அரங்கனின் அருள் நமக்கெல்லாம் வழி நடத்தட்டும்.....

No comments: